Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன்… ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன்… ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

vinoth

, திங்கள், 25 மார்ச் 2024 (15:01 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இடைவெளியே இன்றி நடத்தி வருகிறார் முருகதாஸ்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “ரமணா படத்தின் ஷூட்டிங்கை நடத்திய இடத்துக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறேன். தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருப்பது விசித்திரமான உணர்வை தருகிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கமடைந்து விழுந்தேன்.. சமந்தா சொன்ன ஷாக்கிங் தகவல்!