Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யன் கானுக்காக 500 மரக்கன்றுகளை நட்ட நடிகை!

ஆர்யன் கானுக்காக 500 மரக்கன்றுகளை நட்ட நடிகை!
, சனி, 13 நவம்பர் 2021 (10:49 IST)
நடிகை ஜூகி சாவ்லா ஆர்யன் கான் பிறந்தநாளில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன் மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிணைக்காக ஆர்யன் கான் ஒரு லட்சம் ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அப்படி அவர் செலுத்தாத பட்சத்தில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஜூஹி சாவ்லா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் ஷாருக்கானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

இந்நிலையில் ஆர்யன் கானின் பிறந்தநாளை முன்னிட்டு 500 மரக்கன்றுகளை நட்டதாக டிவிட்டரில் அறிவித்துள்ள ஜூஹி சாவ்லா ‘உங்களின் வருங்கால ஆசைகள் நிறைவேறட்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கனாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட வேண்டும்… வலுக்கும் கண்டனங்கள்!