Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

23 வருட இயக்குநர்...இனிமேல் நடிகர்...செல்வராகவன் டுவீட்

23 வருட இயக்குநர்...இனிமேல் நடிகர்...செல்வராகவன் டுவீட்
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:22 IST)
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,இரண்டாம் உலகம் ,ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

இந்நிலையில்,  இவரது இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ’’நானே வருவேன்’’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிநல்ல வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் செல்வராகவன் கூட்டணி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.
 

நானே வருவேன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என இயக்குனர் அறிவித்துள்ளார். தனுஷ் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்களை முடித்துவிட்டதால் இவை ரிலீஸுக்குத்தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் படம் விரைவில் உருவாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு             அவர் நடிக்கும் முதல் படம் இதுதான். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் முதலில் இயக்குநர் இப்போது நடிகர்…என் ரசிகர்களே என்னை உருவாக்கினார்கள் எனத் தெரிவித்து தனது புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ மணப்பெண்ணே படத்தின் LAZY பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!