Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிதா மகனுக்கு பிறகு பாலாவோடு இணைந்த ஒளிப்பதிவாளர்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:59 IST)
சூர்யா பாலா இணையும் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே பாலாவோடு பிதாமகன் படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத நாட்டில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் வேட்டையன்!

இயக்குனர் என்னை அடித்தார்… ஆனால் நான் இயக்குனரை அடித்ததாகப் பரப்பிவிட்டார்கள் – பத்மபிரியா வேதனை!

பிரபல நடிகை சோனா வீட்டில் கத்தியோடு புகுந்து மிரட்டிய மர்ம நபர்கள்!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்!

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments