Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான சீக்ரெட்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (11:10 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துவரும்.மார்ச் மாதம் 18 ஆம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. மூன்றே மாதத்தில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் சுர்யாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா ஒரு மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கேட்கும் திறன் அற்ற் வாய் பேசாத முடியாதவராக இந்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் விஷால் மாறுகண் கொண்டவராக நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தகக்து.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments