Publish Date: Mon, 04 Jan 2010 (09:55 IST)
Updated Date: Mon, 04 Jan 2010 (09:54 IST)
தேவையான பொருள்கள்:
மைதா - 1கிலோ
ரவை - சிறிதளவு
அரைத்த சர்க்கரை பவுடர் - 3/4 கிலோ
சோடா உப்பு - சிறிதளவு
டால்டா - 3 ஸ்பூன்
தண்ணீர் - பிசைய தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
பாதாம் எசன்ஸ் அல்லது வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு
பால்பவுடர் - 5 ஸ்பூன்
ரிபைன்டு ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: முதலில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அதனை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்தி கல்லில் சிறு மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.
தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து வாய்அகன்ற பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் காற்றுபுகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சுவையான மைதா கேக் தயார்.