Publish Date: Wed, 21 Apr 2010 (13:20 IST)
Updated Date: Wed, 21 Apr 2010 (13:20 IST)
தேவையானவை
கடையில் வாங்கிய கேழ்வரகு சேமியா - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய், உப்பு - சிறிது
செய்யும் முறை
ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் உப்புப் போட்டு கலக்கவும்.
கேழ்வரகு சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு நீரை தெளித்து நன்கு கிளறி விடவும்.
சேமியா முழுவதும் நீரில்பட்டு தளதள என்று இருக்கும். அதை அப்படியே ஒரு 10 நிமிடம் ஊறவிடவும்.
இட்லி குண்டானில் கீழே தண்ணீர் ஊற்றி முதல் இட்லி தட்டை மட்டும் வைத்து ஒரு வெள்ளைத் துணியை போடவும்.
அதில் ஊறிய சேமியாவை வைத்து துணியால் மூடி இட்லி குண்டான் மூடியையும் போட்டு மூடி வேக வைக்கவும்.
15 நிமிட நேரம் வெந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி அதில் தேவையான அளவு தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து கிளறி சாப்பிடலாம். சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட