Publish Date: Thu, 06 May 2010 (17:22 IST)
Updated Date: Thu, 06 May 2010 (17:22 IST)
தேவையானவை
பூசணிக்காய் துண்டு - பெரியது
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
பால் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 3 கப்
நெய் - 1 கப்
கேசரிப் பவுடர் - சிறிது
பச்சைக் கற்பூரம் - சிறிது
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி - 10
செய்யும் முறை
பூசணிக்காயைத் துருவி அதில் சிறிது நீர்விட்டு சாறைப் பிழிந்து கொள்ளவும். சக்கையை மட்டும் எடுத்து அதனை பால் விட்டு மிக்சியில் அரைக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் அரைத்த பூசணிக்காய் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
கேசரிப் பவுடரை சிறிது நீரில் கரைத்துக் கொண்டு வாணலியில் ஊற்றவும்.
இறுதியாக ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்து கிளறிவிடவும்.
பரிமாறும் போது நெய்யில் வறுத்த முந்திரியைக் கொண்டு அலங்கரிக்கவும்.