தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி : 2 கப்
கோதுமை மாவு : 1 கப்
வெல்லம் : 21/4 கப்
நல்லெண்ணெய் : சுடுவதற்கு
செய்முறை :
புழுங்கலரிசியைக் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய பின் நன்றாக அரைக்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி கரைந்தபின் வடிகட்டவும்.
நன்றாக ஆறிய பிறகு கோதுமை மாவுடன் கலக்கவும் இதை அரைத்த புழுங்கலரிசி மாவுடன் சேர்த்து பதமாகக் கரைக்கவும்.( பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு )
ஒரு சிறிய வாணலியில் 2 அங்குலத்திற்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சிறிய நெல்லிக்காயளவு புளியைப் போட்டு கருத்ததும் எடுத்துவிடவும். ( இப்படி செய்வதால் எண்ணெய் பொங்காமல் இருக்கும். )
ஒரு சிறிய கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் விடவும்.
எண்ணெயில் மாவு ஊற்றியதும் முதலில் அடியில் தங்கி, மேலே மிதந்து வரும்.
திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து எண்ணெய் வடிவதற்காக ஒரு வலை தட்டில் வைக்கவும். ( மெத்தென்று இருக்கும் போதே எடுக்கவும். அதிகம் கரகரப்பாக விட வேண்டாம். )
ஒரு பேப்பரின் மேல் வைத்து அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டதும் ஒரு அகலத்தட்டில் பரவலாக வைக்கவும்.
நன்றாக ஆறியதம் டப்பாவில் எடுத்து வைக்கலாம் ( சூடாக இருக்கம்போது டப்பாவில் அடுக்கினால் ஒட்டிக் கொள்ளும்). இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவும்.