Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான மற்றும் சுவையான பால் பணியாரம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி- 100கிராம்
உளுந்து- 75கிராம்
பசும்பால்- 200மில்லி
தேங்காய்பால்- ஒருடம்ளர்
சர்க்கரை- 100கிராம்
ஏலக்காய்பொடி- சிறிதளவு
எண்ணெய்- தேவையானஅளவு

செய்முறை:
 
பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும். 
 
பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும். அதன் பின் தயாராக இருக்கும் மாவை சிறிய அளவிலான உருண்டையாக உருட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். 
 
அந்த உருண்டைகளை கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுத்து, தயாராக வைத்துள்ள பாலில் போடவும். இப்போது சுவையான பால் பணியாரம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments