Publish Date: Mon, 26 Dec 2016 (14:16 IST)
Updated Date: Mon, 26 Dec 2016 (14:18 IST)
தன்னுடைய தந்தை கணவர் கமல்ஹாசனுடன் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகை கவுதமி குறித்து தான் எதுவும் பேச விரும்பவில்லை என நடிகை ஸ்ருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுடன், அவரின் வீட்டில் 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி அவரை விட்டு சமீபத்தில் பிரிந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் “ கவுதமி பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. எனது தந்தை உட்பட யாருடைய சொந்த வாழ்க்கை குறித்தும் நான் கருத்து கூற விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.