Publish Date: Wed, 18 Jan 2023 (12:32 IST)
Updated Date: Wed, 18 Jan 2023 (12:35 IST)
தான் நடிக்க வந்ததே பணத்துக்காக தான் என டாப் நடிகை ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்று தான் சினிமாவிற்கு வந்தது குறித்து பேசிய அவர், நான் நடிக்க வந்த புதிதில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நடித்தால் பணம் வருகிறது என்று கூறியதால் தான் நடித்தேன் என்று கூறினார்.
Papiksha Joseph
Publish Date: Wed, 18 Jan 2023 (12:32 IST)
Updated Date: Wed, 18 Jan 2023 (12:35 IST)