Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டைக் குதிரை சவாரியில் விருப்பமில்லை - சமந்தா பேட்டி

இரட்டைக் குதிரை சவாரியில் விருப்பமில்லை - சமந்தா பேட்டி
, புதன், 15 ஏப்ரல் 2015 (12:30 IST)
சர்ச்சையின் நாயகியாகியிருக்கிறார் சமந்தா. ட்விட்டரில் பிரபலங்களை சீண்டி சிக்கலுக்குள்ளாவது இவரது பொழுதுப்போக்கு. சித்தார்த், ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் தற்போது தொழிலதிபரை காதலிப்பதாக செய்தி. ஹைதராபாத்தில் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பட்படார் என்று வந்தது பதில்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறீர்களே?
 
என் மனதில் இருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவு செய்கிறேன். மற்றபடி சினிமாதுறையில் எனக்கு யாருடனும் சண்டை கிடையாது. எல்லோருடனும் நட்புடனே பழகுகிறேன்.
 
இந்திப் படங்களை தவிர்ப்பது ஏன்?
 
இந்திப் படங்களில் நடிக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. இரட்டை குதிரை சவாரி செய்ய விருப்பமில்லை.
 
தொழிலபதிபர் ஒருவரை நீங்கள் காதலிப்பதாக செய்தி உள்ளதே?
 
அந்த தொழில் அதிபர் யார் என்று சொல்லுங்கள். என்ன தொழில் செய்கிறார் என்று கூறுங்கள். போன் நம்பரையும் தெரியப்படுத்துங்கள். நடிகருடன் இணைத்து பேசாமல் தொழில் அதிபரை மணக்க போகிறேன் என்று சொன்னதில் சந்தோஷம்தான். காரணம் நான் சினிமா நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன். 
 
அப்படியானால் தொழிலதிபரை நீங்கள் காதலிப்பது உண்மைதானா?
 
தொழில் அதிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உண்டு. ஆனாலும் காதல் கீதல் எதுவும் இப்போது இல்லை. திருமணமும் இப்போதைக்கு இல்லை. 

கத்தி படத்தில் சமந்தாவின் இடுப்பை பார்க்கும் போது விஜயவாடாவில் உள்ள பென்ஸ் வளைவு போல் உள்ளது என தெலுங்கு காமெடி நடிகர் அலி கமெண்ட் அடித்துள்ளாரே?
 
எனக்கு அலி மிகவும் நெருங்கிய நண்பர். அவர் ஒன்றும் என்னை அவமானப்படுத்தும் நோக்கில் பேச மாட்டார். சும்மா ஜாலியாக தான் அதை தெரிவித்தார்.
webdunia
சினிமாவில் முதல் இடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
முதல் இடம் இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் ஹிட்டானால் அந்த நடிகைதான் நம்பர் ஒன். தோல்வி அடைந்தால் முந்தைய வெற்றிகளை எல்லாம் மறந்து ஓரத்தில் ஒதுக்கி விடுவார்கள். என்னை பொறுத்தவரை ஐந்து வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை விடவும் அழகான திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது என் அதிர்ஷ்டம். 
 
தெலுங்கில் மட்டும் இரண்டு மூன்று நாயகிகளுடன் நடிக்கிறீர்களே?
 
மூன்று, நான்கு கதாநாயகிகளுடன் நடிப்பது தவறல்ல. ரசிகர்களும் ஒரு படத்தில் நிறைய கதாநாயகிகள் நடிப்பதை விரும்புகிறார்கள். நான் திறமையான டைரக்டரா என்றுதான் முதலில் பார்ப்பேன். அதன்பிறகுதான் கதை, கதாநாயகன் எல்லாம். சிறந்த இயக்குனர் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கிறேன். தமிழில் மூன்று, நான்கு கதாநாயகிகளுடன் நடிக்க வாய்ப்பு வருவதில்லை. வந்தால் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil