Publish Date: Mon, 30 Jan 2017 (18:00 IST)
Updated Date: Mon, 30 Jan 2017 (18:04 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உண்டான கலவரத்தின் போது, மாணவர்களை தாக்கியதாக தமிழக போலீசார் மீது பெரும்பாலானோரால் குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால், போராட்டத்தில் சில அமைப்பினர் உள்ளே புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர் என போலீசர் குறை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா “ ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காவல்துறை மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, ஒட்டு மொத்த காவல்துறையையும் குறை சொல்லக்கூடாது. சமூகத்தில் அவர்களின் பணி மிகவு முக்கியம்” என அவர் கூறினார்.