Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்
, சனி, 27 ஜூன் 2015 (10:15 IST)
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்தக் கலைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தக் கலைப்பின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டு அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil