Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாகன விபத்தில் இலங்கை அதிபரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 4 பேர் பலி

வாகன விபத்தில் இலங்கை அதிபரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 4 பேர் பலி
, வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (16:47 IST)
இலங்கையின் மினுவாங்கொட பகுதியில் இன்று நடந்த வாகன விபத்தில் அதிபரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகரிகள் 4 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்புவின் மினுவாங்கொட பகுதியின் மிரிஸ்வத்த என்ற இடத்தில் அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் சிக்கிக் கொண்டதால் வாகனத்தில் இருந்த 2 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் 2 அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர். உயிரிழந்த 4 அதிகாரிகளில் ஒருவர் பெண் அதிகாரியாவார்.

மேலும் 6 அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil