Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி இருப்பேன்… பாகிஸ்தான் வீரர் புகழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (17:57 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாகிஸ்தான் வீரர் யாசிர் அராபத் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி டி 20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர். அதுமட்டுமில்லாமல் அவரின் தலைமையில் இந்திய அணி மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் யாசிர் அராபத் ‘தோனி மட்டும் ஓய்வு பெறவில்லை என்றால் அவரை பாகிஸ்தான் அணிக்குக் கேப்டனாக்கி இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘தோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் வீரர்களின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவார். பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தோனி போல் மேன் மேனேஜ்மெண்ட் தெரிந்த ஒரு கேப்டன் வேண்டும். 90களில் தோனிக்கு முன்பாக மைக்கேல் பெவன் பினிஷராக இருந்தார். ஆனால் இப்போது தோனியின் அருகே கூட எந்த வீரராலும் வர முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments