Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது நாள் ஆட்டமும் பாதிப்பு: பாதியில் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி!

2வது நாள் ஆட்டமும் பாதிப்பு: பாதியில் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி!
, ஞாயிறு, 20 ஜூன் 2021 (06:59 IST)
2வது நாள் ஆட்டமும் பாதிப்பு: பாதியில் நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது
 
இதனையடுத்து நேற்று டாஸ் போடப்பட்டு டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் இந்திய அணியின் ரோகித் சர்மா 34 ரன்களும், சுபன் கில் 28 ரன்களுக்கும், புஜாரே 8 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் விராத் கோலி மற்றும் ரஹானே ஆடி வருகின்றனர்
 
விராட் கோலி 44 ரன்களும் ரஹானே 29 ரன்களில் எடுத்து வரும் நிலையில் நேற்று 65ஆவது ஓவர் வீசப்பட்ட போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு நாள் முழுக்க முடிவடைந்து விட்ட போதிலும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த ஆட்டம் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் : விராட் கோலி புதிய சாதனை....