Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா விளையாட தடை! – ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலக்கம்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (09:53 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் பல்வேறு உலகளாவிய போட்டிகளில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 7 நாட்களாக ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது.

முன்னதாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து தெரிவித்திருந்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்தது.

தொடர்ந்து தற்போது உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் விளையாடுவதற்கு உலக ரக்பி நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இவ்வாறான தடைகளால் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி… தேதி பற்றிய தகவல்!

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments