Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைசதம் அடித்த சுப்மன் கில்.. இலக்கை நெருங்கிவிட்ட இந்தியா..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (19:52 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 257 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது,. 
 
முன்னதாக வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 48   ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 
 
இதனை அடுத்து தற்போது சுப்மன் கில் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் சுப்மன் கில்  50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.  
 
இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை  19 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 31 ஓவர்கள் மீதம் இருக்கையில் 9 விக்கெட் கையில் இருக்கையில் 127 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி இந்த போட்டிகள் மிக எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments