Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

345 என்ற இமாலய இலக்கை கொடுத்த இலங்கை.. 4 ஓவரில் விக்கெட் இழந்து திணறும் பாகிஸ்தான்..!

345 என்ற இமாலய இலக்கை கொடுத்த இலங்கை.. 4 ஓவரில் விக்கெட் இழந்து திணறும் பாகிஸ்தான்..!
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:52 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வரும் நிலையில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது

இலங்கை பேட்ஸ்மேன்  மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகிய இருவரும் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா அரை சதம் அடித்து உள்ளார்.

இந்த நிலையில் 345 என்ற இமாலய இலக்கை நோக்கி தற்போது பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. அந்த அணி நான்காவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் விக்கெட்டை இழந்து விட்டது என்பதும் தற்போது கேப்டன் பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

 பாகிஸ்தான் அணி சற்று முன் வரை  5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பதும் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் இலங்கை! – இமாலய இலக்கை நோக்கி..!