Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (20:00 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளதால் இந்திய பேட்மிட்டன் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் 
 
 
இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவு காலிறுதி போட்டியில் தவான் வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டில் பின் வாங்கினாலும் அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி தைவான் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது 
 
 
இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின்  சாய் பிரனீத், இந்தோனேஷியா வீரரை 24-22, 21-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதனால் ஆண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கும் பதக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே தற்போது 36 ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments