கடைசி பந்து ஹீரோவை கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா கொல்கத்தா ரசிகர்கள்?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (16:45 IST)
தினேஷ் கார்த்திக் ஐபிஎல்2018 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த கொல்கத்தா ரசிகர்கள் தற்போது அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
 
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவின் ஹீரோவாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி மீம்ஸ் போட்டி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
 
ஐபிஎல்2018 போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கொல்கத்தா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் தங்களது கருத்துகளை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இந்திய அணியை கடைசி நேரத்தில் வெற்றி பெற செய்து ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்-ஐ கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments