போலி நிறுவனத்தில் முதலீடு செய்து 4 கோடியை இழந்த டிராவிட்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:09 IST)
போலி நிறுவனம் ஒன்று தன்னுடைய 4 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த  ராகவேந்திர ஸ்ரீநாத் என்பவர்  'விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். 40 சதவீத வட்டி தருவதாக ஆசைக்காட்டினார். இதனை நம்பி  அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்சில் முதலீடு செய்தனர். விளையாட்டு நிரூபரும் ஸ்ரீநாத்தின் கூட்டாளியுமான சுரேஷ் என்பவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்,  சாய்னா நேவால் மற்றும் பிரகாஷ் படுகோன் ஆகியோரை போலி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார். பிறகு அனைவரும் தலைமறைவாகினர்.
 
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து ராகவேந்திர ஸ்ரீநாத், சுரேஷ், நரசிம்மமூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெங்களூரு போலீசில் ராகுல் டிராவிட் அளித்த புகாரில், ராகவேந்திராவின் நிறுவனத்தில், 20 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். அதில் 16 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வந்தது. பாக்கித் தொகையான 4 கோடி ரூபாயை மீட்டுத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments