Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி நிறுவனத்தில் முதலீடு செய்து 4 கோடியை இழந்த டிராவிட்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:09 IST)
போலி நிறுவனம் ஒன்று தன்னுடைய 4 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த  ராகவேந்திர ஸ்ரீநாத் என்பவர்  'விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். 40 சதவீத வட்டி தருவதாக ஆசைக்காட்டினார். இதனை நம்பி  அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்சில் முதலீடு செய்தனர். விளையாட்டு நிரூபரும் ஸ்ரீநாத்தின் கூட்டாளியுமான சுரேஷ் என்பவர்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்,  சாய்னா நேவால் மற்றும் பிரகாஷ் படுகோன் ஆகியோரை போலி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார். பிறகு அனைவரும் தலைமறைவாகினர்.
 
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து ராகவேந்திர ஸ்ரீநாத், சுரேஷ், நரசிம்மமூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெங்களூரு போலீசில் ராகுல் டிராவிட் அளித்த புகாரில், ராகவேந்திராவின் நிறுவனத்தில், 20 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். அதில் 16 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வந்தது. பாக்கித் தொகையான 4 கோடி ரூபாயை மீட்டுத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments