Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி விதிவிலக்கு அல்ல: இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி விதிவிலக்கு அல்ல: இந்திய கேப்டன் மிதாலி ராஜ்
, வியாழன், 20 ஜூலை 2017 (06:03 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்து இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன



 
 
ஏற்கனவே லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், இந்திய அணி வீராங்கனைகள்  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் அசத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அரையிறுதி போட்டி நடக்கவுள்ள டெர்பி மைதானத்தில், அதிக லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அதனால் போதிய அனுபவம் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கஷ்டம் தான். ஆனாலும் தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி விதிவிலக்கு அல்ல.’ என்று கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையாட்டி பொம்மையாக மாறியதா பிசிசிஐ? அடுத்த கண்டிஷன் போட்ட ரவி சாஸ்திரி!!