Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் தோனி: பிடிவாதத்தால் கிடைக்கும் தொடர் தோல்விகள்

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் தோனி: பிடிவாதத்தால் கிடைக்கும் தொடர் தோல்விகள்
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:07 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறலாம்
 
ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி எட்டாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக பெற்று உள்ளது 
 
 
நேற்றைய போட்டியில் தோனி அணியை தேர்வு செய்ததிலேயே தோல்வியை உறுதி செய்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வரும் கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லாவை அவர் ஆடும் அணியில் தேர்வு செய்தது மிகப் பெரிய தவறு என்றும் ஜெகதீசன், கெய்க்வாட், சாண்ட்னர் ஆகிய இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல் பிடிவாதமாக மோசமாக விளையாடுபவர்களுக்கு தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுக்கிறார் ஏன் என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்காதே தோனிக்கு எப்படி வெற்றி கிடைக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. இதே பிடிவாதத்தில் அடுத்து வரும் நான்கு போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் தோல்வி அடையும் என்பது கண்கூடாக தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; சென்னை கிங்ஸ் படுதோல்வி...7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி