Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியின் புதிய கேப்டன் யார்? மூன்று வீரர்களின் பெயர் பரிசீலனை!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:42 IST)
ஐபிஎல் தொடரில் கவனம் பெற்ற அணிகளில் ஒன்றான ஆர்சி பி-யின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார்.

ஆனால் இப்போது அவர் சர்வதேச போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் அவருக்கான பணிச்சுமை குறைந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் ஆர் சி பி அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அதில் கோலி விருப்பம் காட்டுவது போல தெரியவில்லை.

இந்நிலையில் விரைவில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்னமும் ஆர் சி பி அணிக்குக் கேப்டன் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மூன்று வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. க்ளன் மேக்ஸ்வெல், பாஃப் டு பிளஸ்சி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரில் ஒருவர் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments