2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் எடுத்த முடிவு!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (18:38 IST)
2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் எடுத்த முடிவு!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெறும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரை வெல்லாமல் தடுக்க தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெல்லும் அணி எந்த அணியை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணிக்கு ஷிகர் தவான் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments