Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒருநாள் போட்டி.. மே.இ.தீவுகள் அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (17:03 IST)
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 260 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் 261 என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 29.3 ஓவர்களை ஆறு விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த தொடரில் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் மூன்றாவது போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் சமனில் முடிந்தது. 
 
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 25 முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் அறிவிப்பு… ஆர்ச்சர் இடம்பெற்றாரா?

அம்மா போட்ட பவுலிங்.. க்ளீன் போல்ட் ஆன ஸ்ரேயாஸ் அய்யர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இரண்டாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக இணைந்த முன்னாள் வீரர்!

கேப்டன் கூல் என்ற வார்த்தைக்கு ‘ட்ரேட் மார்க்’ விண்ணப்பித்த தோனி!

பும்ரா உடல் தகுதியோடு இருக்கிறார்… ஆனால் அணியில் இருப்பாரா?- வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments