Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (15:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி சீராக விளையாடி வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச வந்த போது, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார்.

தற்போது வரை ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 94 ரன்களை சேர்த்து தொடர்ந்து ஆடி வருகிறது. களத்தில் டேவிட் வார்னரும், லபுஷானும் ஆடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments