Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்: வங்கதேச கேப்டன்

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்: வங்கதேச கேப்டன்
, வியாழன், 15 ஜூன் 2017 (06:47 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.



 


நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி, அதுவும் இறுதிப்போட்டி என்றால் ரசிகர்களின் குஷியை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மொர்டசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையால் வெல்ல முடிந்தபோது எங்களால் ஏன் வெல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ள மஷ்ரஃபே மொர்டசா, இந்தியாவுக்கு தான் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகம், ஆனால் எங்களுக்கோ இது இன்னொரு போட்டி அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபைனலுக்கு சென்றது பாகிஸ்தான்: முதல் தோல்வியில் மூட்டையை கட்டிய இங்கிலாந்து