Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் சீக்கிரம் ஆட்டமிழக்கிறார்; அவரை இன்னும் பின்னால் இறக்க வேண்டும் – முன்னாள் வீரர் கருத்து

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:31 IST)
இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்டை நான்காவதாக இறக்காமல் இன்னும் கீழ் வரிசையில் இறக்க வேண்டும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டு அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.  

அவரது ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் ‘ ரிஷப் பண்ட் நான்காவது இடத்தில் இறங்குவதால் அவரது இயல்பான ஆட்டமான ஆக்ரோஷத்தோடு விளையாட முடியவில்லை. அவரை 5 அல்லது 6 ஆவதாக இறக்க வேண்டும். மோசமான பேட்டிங்கால் 4-வது வரிசையில் களமிறங்க அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண் டியா, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் உள்ளனர். ரிஷப் பந்த் அதிக அழுத்தத்துக்கு ஆளாகக்கூடாது. தோனியின் இடத்தை எடுத்துக் கொண்டதால் அவர் தன் மேல் அதிக அழுத்தத்தை உணர்கிறார்.  அணி நிர்வாகம் அவரை 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்கி அவரின் திறமையை வெளிப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments