சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர்! – விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)ன் துணைத் தலைவராக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடந்து வருவது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆம், சென்னையில் தற்போது நடந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தேர்தலில் இந்திய செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தலைவராக பொறுப்பு வகித்த ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பில் இந்தியாவின் சாம்பியன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து செஸ் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments