Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை… ராயுடு கலாய்த்தது பற்றி விஜய் ஷங்கர்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (12:53 IST)
உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் அம்பாத்தி ராயுடு விஜய் சங்கரை கலாய்த்திருந்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில்.அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடு இடம்பெறவில்லை.  அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்’ எனக் கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அம்பாத்தி ராயுடு டிவிட்டரில்’ உலகக்கோப்பையைக் காண இப்போதுதான் 3 டி கண்ணாடி வாங்கியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். ராயுடுவின் இந்த கமெண்ட் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இப்போது விஜய் ஷங்கர் அதுகுறித்து பேசியுள்ளார். அதில் ‘எனக்கும் ராயுடுவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நன்றாக பேசிக்கொள்வோம். எனக்கு அவரிடம் எந்த மனக்கசப்பும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments