பாகிஸ்தானில் முடியாது என்று சொல்ல முடிகிறது… இந்தியாவில் சொல்ல முடியுமா? உஸ்மான் கவாஜா கேள்வி!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:20 IST)
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாது என்று நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. அதுபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தாங்கள் செல்ல மாட்டோம் என அறிவித்து விட்டன.

இதுகுறித்து பேசியுள்ள ஆஸி வீரர் உஸ்மான் கவாஜா ‘ பாகிஸ்தான் என்பதால் வீரர்களால் எளிதாக விளையாட முடியாது என்று சொல்ல முடிகிறது. ஆனால் இதுவே இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சனை என்றால் சொல்ல முடியாது. ஏனென்றால் அங்கு பணம்தான் பேசும். இப்போது கிரிக்கெட்டை முடிவு செய்வதில் பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்று அந்நாட்டு அரசு சொல்லி வருகிறது. அப்படி இருக்கும்போது ஏன் நாம் அங்கு சென்று விளையாடக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments