Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணியில் இரு மேற்கிந்திய வீரர்கள்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:09 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒஷேன் தாமஸ் மற்றும் எவின் லெவிஸ் ஆகியோர் இணைய உள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரரான ஜோஸ் பட்லர் தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விலகியுள்ளார். அதே போல அந்த அணியின் பென் ஸ்டோக்ஸும் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஒஷேன் தாமஸ் மற்றும் எவின் லெவிஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments