Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது டெஸ்ட்டில் அஸ்வின் வருகை… ஜோ ரூட் சொன்ன பதில்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:05 IST)
நான்காவது டெஸ்டில் இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணியில் நாளைக் கண்டிப்பாக அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜோ ரூட் ‘அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.  பந்தை மட்டுமே நாங்கள் பார்ப்போமே தவிர அவர்களின் வரலாறுகளை அல்ல.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்: குஜராத் பள்ளி மாணவர் சாதனை!

கான்பூர் டெஸ்ட் போட்டி நடக்குமா?.. முதல் மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்… அஸ்வின் படைக்க போகும் சாதனைகள் லிஸ்ட்!

ரிஷப் பண்ட் குறித்து நாங்கள் பாகிஸ்தானில் வருத்தமடைந்தோம்… ஆனால் இப்போது ? –வாசிம் அக்ரம் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments