Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் அப்டேட்… இந்திய மல்யுத்த வீரர்கள் காலிறுதிக்கு தகுதி!

ஒலிம்பிக் அப்டேட்… இந்திய மல்யுத்த வீரர்கள் காலிறுதிக்கு தகுதி!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:14 IST)
இந்தியாவைச் சேர்ந்த ரவிக்குமார் தஹியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் சிறப்பாக விளையாடி காலிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மல்யுத்தத்தில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியாவும்,  85 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியாவும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!