Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி மறைவு எதிரொலி: டி.என்.பி.எல். ஆட்டங்கள் ரத்து

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (08:45 IST)
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெறவிருந்த இரண்டு டி.என்.பில்.போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது
 
நெல்லையில் நேற்று நடைபெற வேண்டிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் இடையே நடைபெறவிருந்தது. அதேபோல்  நத்தத்தில் கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் நடைபெறவிருந்தது. இந்த இரு ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டதாக டி.என்.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ரத்து செய்யப்பட்ட இந்த ஆட்டங்கள் நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு டி.என்.பி.எல் நிர்வாகம் சார்பில் அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments