Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் காலவரையறையற்ற விலகல்… டிம் பெய்ன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:56 IST)
ஆஸி அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையறையின்றி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் இருந்தது. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் தற்போது அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து ஒரு வீரராக அணித்தேர்வில் இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில் இப்போது அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக காலவரையறையின்றி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்