Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே அணியில் 500 ரன்களுக்கும் மேல் 3 வீரர்கள்.. உலகக்கோப்பையில் இதுதான் முதல்முறை..!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (14:54 IST)
உலக கோப்பை வரலாற்றில் ஒரே அணியில் மூன்று வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் அடித்தது இந்த தொடரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலக கோப்பை இறுதிப்போட்டி தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்தாலும் 80 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள மூன்று வீரர்கள் இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஒரே தொடரில் ஒரே அணியில் உள்ள மூன்று வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த மூன்று வீரர்கள் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆகிவிட்ட நிலையில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் புதிய சாதனை படைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments