Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள் தான். கும்ப்ளே ஒப்புதல்

இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள் தான். கும்ப்ளே ஒப்புதல்
, சனி, 25 பிப்ரவரி 2017 (06:18 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது,. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராத் கோஹ்லி டக் அவுட் ஆனார். இந்திய அணியின் 8 பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட் ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 64 ரன்கள் எடுத்தார்.



இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கும்ப்ளே, 'இந்த நாள் ஒரு ஏமாற்றமான நாளாக அமைந்துவிட்டது. லோகேஷ் ராகுல் மற்றும் ரகானே களத்தில் இருக்கும்போது நல்ல நிலையில்தான் இருந்தோம். ராகுல் அவுட்டானவுடன் நான்கு விக்கெட்டுக்களை ஐந்து அல்லது ஆறு பந்தில் இழந்து விட்டோம். இது எங்களை பின்னோக்கு தள்ளிவிட்டது. ஒன்றிரண்டு விக்கெட்டுக்கள் தேவையில்லாமல் இழந்து விட்டோம்' என்று கூறினார்.

முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து மொத்தம் 298 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு தோல்வியா அல்லது டிராவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மரண அடி: 11 ரன்னில் 7 விக்கெட்டை இழந்த சோகம்!