Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் செஃப் ஆக போறேன்... ரெய்னாவின் அடுத்த ப்ளான்!

மாஸ்டர் செஃப் ஆக போறேன்... ரெய்னாவின் அடுத்த ப்ளான்!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:25 IST)
நல்ல சமையல்காரர் ஆக வேண்டும், ஐபிஎல் ஏலத்திற்கு பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் சுரேஷ் ரெய்னா.

 
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.
 
அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட் (unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். 
webdunia
இந்நிலையில் ரெய்னாவை ஏன் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில் ‘ரெய்னா 12 ஆண்டுகள் எங்கள் அணிக்காக ஒரு நிலையான வீரராக இருந்துள்ளார். அவர் இல்லாதது எங்களுக்கும் கடினமாகதான் உள்ளது. ஆனால் அணியின் நிர்வாகம் எந்த அணியை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அதை பொறுத்தே வீரர்களை எடுத்துள்ளோம். அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என நினைக்கிறேன் என கூறினார். 
 
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ரெய்னா. அப்போது அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அரசியலில் சேர்வீர்களா? என்ற கேள்விக்கு, கிரிக்கெட் மட்டுமே எனக்கு தெரியும். அதன் மீதே என்னுடைய காதல் இருக்கும். அரசியல் எனக்கு தெரியாது. இப்போது நல்ல சமையல்காரர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னாவை ஏன் எடுக்கவில்லை… சி எஸ் கே தலைமை செயல் அதிகாரி பதில்!