Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பது ஆபத்தானது… மைக் ஹஸ்சி கருத்துக்கு கவாஸ்கர் பதில்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (12:49 IST)
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை ஆபத்தானது என மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஸி முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகருமான மைக் ஹஸ்சி ‘ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மோதின. அப்போதே கொரோனா பரவல் அணிகளுக்குள் ஊடுருவியது. ஆனால் உலகக்கோப்பையில் அதைவிட அதிக அணிகள் மோதின. அதனால் இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை நடத்துவது ஆபத்தானது. ஐக்கிய அரபு போன்ற நாடுகளே பாதுகாப்பானது’ எனக் கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ‘ஆஸ்திரேலியாவில் நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அப்போது அவர்களுக்கு பணம்தான் பெரிதாகப் பட்டது. தொடரை இடம்மாற்றுவது குறித்து இப்போதே பேச வேண்டியதில்லை. ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்போதே இதுபோன்ற கருத்துகள் சொவது ஆச்சர்யமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments