Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பது ஆபத்தானது… மைக் ஹஸ்சி கருத்துக்கு கவாஸ்கர் பதில்!

டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பது ஆபத்தானது… மைக் ஹஸ்சி கருத்துக்கு கவாஸ்கர் பதில்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (12:49 IST)
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை ஆபத்தானது என மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஸி முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகருமான மைக் ஹஸ்சி ‘ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மோதின. அப்போதே கொரோனா பரவல் அணிகளுக்குள் ஊடுருவியது. ஆனால் உலகக்கோப்பையில் அதைவிட அதிக அணிகள் மோதின. அதனால் இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை நடத்துவது ஆபத்தானது. ஐக்கிய அரபு போன்ற நாடுகளே பாதுகாப்பானது’ எனக் கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ‘ஆஸ்திரேலியாவில் நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அப்போது அவர்களுக்கு பணம்தான் பெரிதாகப் பட்டது. தொடரை இடம்மாற்றுவது குறித்து இப்போதே பேச வேண்டியதில்லை. ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்போதே இதுபோன்ற கருத்துகள் சொவது ஆச்சர்யமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா அறிகுறி… வீட்டுக்குள்ளேயே தனிமை!