Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கோடை கால நீச்சல் பயிற்சி!

J.Durai
வியாழன், 25 ஏப்ரல் 2024 (22:37 IST)
கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்காகவும் தங்களின் தற்காப்பு மற்றும் திறமையை வெளிக்கொணரும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கோடை காலங்களில் பல்வேறு விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 
 
இதன் ஒரு பகுதியாக கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு சிவகங்கை திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.  
 
காலை, மாலை என இரு வேளைகளில் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 
 
இரண்டு மாத காலங்களில் 4 பிரிவுகளாக வழங்கப்படும் பயிற்சியில் ஒவ்வொரு பிரிவிலும் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் நீச்சல் பயிற்சிக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதில் திறமையான நீச்சல் வீரர்களை கண்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த நீச்சல் வீரர்களாக மேம்படுத்தும் விதமாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.
 
தற்போது கோடை காலத்தில் பயனுள்ள  நீச்சல் பயிற்சியினை 52 மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments