Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவாலான இந்திய அணி; தென் ஆப்பரிக்கவை எச்சரித்த இலங்கை பயிற்சியாளர்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (16:00 IST)
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால் அது தென் ஆப்பரிக்க அணிக்கு மிகக் கடினமாக அமையும் என இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது.
 
உலகளவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆணிகள் போல தென் ஆப்பரிக்க அணியும் பலமான அணிதான். இதனால் அனைத்து போட்டிகளும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளது தென் ஆப்பரிக்க அணியை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:-
 
இந்திய அணியின் அனைத்து அடிப்படைகளும் சரியாக அமைந்துள்ளன. எல்லா வகையான பிட்சுக்கும் இந்திய அணி தயாராக உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை ரன்கள் எடுத்தால், அது தென் ஆப்பரிக்கா அணிக்கு மிகக் கடினமாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments