Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் தோல்வி: இலங்கை வீரர்களை சிறை பிடித்த ரசிகர்கள்!!

தொடர் தோல்வி: இலங்கை வீரர்களை சிறை பிடித்த ரசிகர்கள்!!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (16:36 IST)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியிடம் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.


 
 
டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. மேலும், முதல் ஒரு நாள் போட்டியிலும், இலங்கை அணி தோல்வி அடைந்தது.
 
இலங்கை அணியின் மோசமான தொடர் தோல்விகளால் ஆத்திரத்தில் உள்ள இலங்கை ரசிகர்கள், இலங்கை அணி வீரர்கள் சென்ற சொகுசு பேருந்தை சுமார் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சிறைபிடித்தனர்.
 
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இலங்கை அணி வீரர்களை பத்திரமாக அழைத்துச்சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி கட்டாயம் அணிக்கு வெளியே உட்கார வேண்டும்; கவுதம் காம்பீர்