Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி-20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (06:10 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி-20 தொடர் போட்டியில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதல் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களும் எடுத்தனர்.
 
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18.4 ஓவர்களீல் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி 64 ரன்களும், க்லேசன் 69 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி வரும் 24ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments