Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா கொடுத்த இமாலய இலக்கு: வெற்றி கிடைக்குமா?

india vs south africa
, ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (17:46 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய மார்க்கம் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் தலா 79 மற்றும் 74 ரன்கள் அடித்து உள்ளனர். இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 
 
இந்த நிலையில் 279 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இலக்கை எட்ட தீவிர முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது
 
அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை வென்று விடும் என்பதால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இந்திய அணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த முயற்சிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் ஆச்சரிய முடிவு